#BREAKING || தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை.. மீட்பு பணியில் இறங்கும் வீரர்கள்

#BREAKING || தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை.. மீட்பு பணியில் இறங்கும் வீரர்கள்
x

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வெளுத்து வாங்கி வரும் கனமழை. மீட்பு பணியில் மேலும் 75 தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் இணைகின்றனர். மீட்புப் பணிகளுக்காக அரக்கோணத்தில் இருந்து ஏற்கனவே 125 வீரர்கள் கொண்ட 5 குழுக்கள் மழை பாதிப்புள்ள மாவட்டங்களுக்கு விரைந்தனர். மாநில அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் மேலும் 75 வீரர்கள் அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டுள்ளனர். ஒரு குழுவுக்கு 25 வீரர்கள் வீதம் 8 குழுக்களில் 200 தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்