Kovai | மாணவிகளை கன்னத்தில் அறைந்த தலைமை ஆசிரியை கொதித்த பெற்றோர்..எடுக்கப்பட்ட அதிரடி ஆக்‌ஷன்

மாணவிகளை கன்னத்தில் அறைந்த தலைமை ஆசிரியை கொதித்த பெற்றோர்..எடுக்கப்பட்ட அதிரடி

#kovai #thanthitv

Kovai | மாணவிகளை கன்னத்தில் அறைந்த தலைமை ஆசிரியை கொதித்த பெற்றோர்..எடுக்கப்பட்ட அதிரடி ஆக்‌ஷன் கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிடப் பள்ளியில் மாணவிகளைக் கன்னத்தில் அறைந்தும், பிரம்பால் தாக்கியும் வந்த தலைமை ஆசிரியை கிருஷ்ணப்பிரியா பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாணவிகளைத் தாக்கியதுடன் கழிப்பறையைச் சுத்தம் செய்ய வைத்தல் மற்றும் உணவு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்த அவரை இடமாற்றம் செய்யாவிட்டால் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் எனப் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனையடுத்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி தலைமை ஆசிரியரை அதிரடியாகப் பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com