அரசு பள்ளி மாணவனின் பேக்கை பார்த்து அதிர்ந்து போன ஹெட் மாஸ்டர்

x

நெல்லை திசையன்விளை அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவன் புத்தகப் பையில் கத்தியை மறைத்துக் கொண்டு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. கடந்த வியாழக்கிழமை காலை 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் தனது புத்தகப்பையில் புத்தகங்களுக்கு இடையே கத்தியை மறைத்து கொண்டு வந்துள்ளார்.இது குறித்து தலைமையாசிரியர் அளித்த தகவலின்பேரில் பள்ளிக்கு வந்த போலீசார் மாணவனிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.அதில் தன்னை அதே பள்ளியில் படிக்கும் மற்றொரு மாணவர் கத்தியை காட்டி மிரட்டியதாகவும், இதனால் தன்னை ஏதாவது செய்துவிடுவான் என்ற அச்சத்தில் கத்தியை எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த 9ம் வகுப்பு மாணவரை எச்சரித்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்