

கடந்த 24 ம் தேதி சென்னை கடற்கரையில் இருந்து சென்ற புறநகர் ரயிலில், படிக்கட்டில் பயணம் செய்த 5 பேர், பரங்கிமலை ரயில் நிலையத்தில் உள்ள தடுப்பு சுவரில் மோதி உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி, சென்னை பெரம்பூரை சேர்ந்த வழக்கறிஞர் சதீஷ் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.மெட்ரோ ரயிலில் உள்ளது போல், புறநகர் மின்சார ரயில்களிலும் தானியங்கி கதவுகள் பொருத்தி, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தனது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வேணுகோபால், நிர்மல் குமார் அடங்கிய அமர்வு, ஆகஸ்ட் 7-ம் தேதிக்குள் பதிலளிக்க ரயில்வே துறை , தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.