

காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க கோரிய மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இது அரசின் முடிவுக்கு உட்பட்டது என உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது. அத்திவரதர் வைக்கப்படவுள்ள அனந்தசரஸ் குளத்தை சுத்தப்படுத்துவது தொடர்பான வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தது. 10 நாள் தரிசனத்தை நீட்டிக்க கோரிய மனுதாரரின் கோரிக்கையை நீதிபதி திட்டவட்டமாக நிராகரித்தார்.