மாமியார் வீட்டில் கைவரிசை - அக்காவை கூட்டு சேர்த்த தங்கை - தூத்துக்குடியில் பகீர் சம்பவம்

x

தூத்துக்குடியில், 52 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில், தலைமறைவாக இருந்த பெண் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். முத்தையாபுரம் பகுதியில் அஸ்வினி என்ற பெண் தனது அக்கா சுசிலா என்பவருடன் சேர்ந்து, தனது மாமியார் வீட்டில் இருந்து 52 பவுன் நகையை கொள்ளையடித்தார். இதில், அஸ்வினி ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த சுசிலாவை போலீசார் தேடி வந்தனர். இதனிடையே, சுசிலாவின் கணவர் காவலாரக பணியாற்றி வருவதால் சம்பவம் குறித்து அறிந்த அவர், தனது மனைவியை முத்தையாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்