எச்.ராஜா பேச்சு: "அதிமுக அமைதியாக இருப்பது ஏன்...?" - கே.எஸ்.அழகிரி கேள்வி

சிஏஏவிற்கு எதிராக தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால், மத்திய அரசு, தமிழக அரசை கலைத்து விடும் என, எச்.ராஜா கூறியிருப்பதன் பின்னணி என்ன என்பதை, அரசு விளக்க வேண்டும் என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

சிஏஏவிற்கு எதிராக தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால், மத்திய அரசு, தமிழக அரசை கலைத்து விடும் என, எச்.ராஜா கூறியிருப்பதன் பின்னணி என்ன என்பதை, அரசு விளக்க வேண்டும் என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,இதில் ஏன் அதிமுக மௌனம் காக்கிறது என கேள்வி எழுப்பினார். ராஜிவ்காந்தி நினைவிடத்தில் டிக் டாக் வீடியோ எடுத்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி மீது தமிழக அரசு வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

X

Thanthi TV
www.thanthitv.com