கஞ்சா விற்பனை - இருவர் கைது

நாகர்கோவிலில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்
கஞ்சா விற்பனை - இருவர் கைது
Published on
நாகர்கோவிலில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.நாகர்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு மைதானம் முன் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த இருவரை வடசேரி போலீசார் பிடித்து விசாரித்துள்ளனர்.அவர்கள் அங்கிருந்து தப்பிசெல்ல முயன்றால் அவர்கள் வைத்திருந்த பையை போலீசார் சோதனையிட்டனர்.அதில் 250 கிராம் கஞ்சா இருந்ததால் அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது.இதனையடுத்து இருவரையும் போலீசார் கைதுசெய்தனர்
X

Thanthi TV
www.thanthitv.com