கள்ள துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

துறையூர் அடுத்த கோம்பை ஊராட்சிக்கு உட்பட்ட மணலோடை கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவர், வீட்டிலிருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு பழமலையான் கோவில் அருகில் வேட்டைக்குச் சென்றுள்ளார். அப்போது, நாட்டுத் துப்பாக்கியில் வெடி மருந்தை நிரப்பும்போது, எதிர்பாராவிதமாக துப்பாக்கி வெடித்ததில் கார்த்தியின் வலது கையில் படுகாயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் அரசு உரிமம் இல்லாமல் நாட்டுத்துப்பாக்கி பயன்படுத்தியது தெரியவந்ததை அடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்