அரசுப் பள்ளி பெயர் பலகை விவகாரம் - திமுக, அதிமுகவினர் கடும் வாக்குவாதம்

ராணிப்பேட்டை அருகே திமுக மற்றும் அதிமுகவினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால், பரபரப்பு நிலவியது.
அரசுப் பள்ளி பெயர் பலகை விவகாரம் - திமுக, அதிமுகவினர் கடும் வாக்குவாதம்
Published on
லாலாபேட்டை பகுதியில் உள்ள அரசுப் பள்ளியின், நுழைவு வாயிலில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து கட்டப்பட்டது என குறிப்பிடாமல், நிதியுதவி என்று மட்டுமே அவரது பெயர் அதில் இடம்பெற்றிருந்ததால், அதிமுகவினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், நுழைவாயிலில் பொறிக்கப்பட்ட அந்த பெயர் பலகையை அப்புறப்படுத்துமாறும் அதிமுகவினர் வலியுறுத்தி உள்ளனர். இந்த நிலையில் திமுகவினர் அங்கு வந்ததால், கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.
X

Thanthi TV
www.thanthitv.com