தனியார் பள்ளிக்கு நிகராக மடுகரை அரசு பள்ளி : பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் போட்டி

புதுச்சேரி மடுகரையில் தனியார் பள்ளியை விஞ்சிய அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டது.
தனியார் பள்ளிக்கு நிகராக மடுகரை அரசு பள்ளி : பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் போட்டி
Published on
புதுச்சேரி மடுகரையில் தனியார் பள்ளியை விஞ்சிய அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டது. அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பாதுகாப்பான வகுப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தனியார் பள்ளிக்கு நிகராக, அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தரமான கல்வி கொடுக்கப்படுகிறது. கைதேர்ந்த ஆசிரியர்களின் சிறப்பு பயிற்சி காரணமாக, இங்கு படித்த மாணவர்களுள் 22 பேர் மத்திய அரசின் உண்டு உறைவிட பள்ளியான நவோதயாவில் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர். கல்வி தரத்தை பார்த்து அசந்து போன பெற்றோர்கள் பிள்ளைகளை சேர்க்க போட்டி போட்டு வரும் நிலையில், அரசு தொடக்கப்பள்ளியில் இடம் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com