அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் தற்கொலை

அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் தற்கொலை

அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் தற்கொலை

வாணியம்பாடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாணியம்பாடி பைபாஸ் சாலையில் வசித்து வந்த 50 வயதான சிவசுப்பிரமணியம், வீட்டின் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற நகர காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com