ஆம்பூரில் அரசு மருத்துவமனை கண்ணாடியை உடைத்து, ஊழியரை தாக்கிய வழக்கில் ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். காயம் அடைந்த மருத்துவமனை ஊழியர், அளித்த புகாரின் பேரில் ஆம்பூர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்த சசிக்குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்