Government bus | திடீரென அரசு பேருந்து மீது கிழிந்து விழுந்த பந்தல் நடுரோட்டில் பரபரப்பு
Government bus | திடீரென அரசு பேருந்து மீது கிழிந்து விழுந்த பந்தல் நடுரோட்டில் பரபரப்பு
Government bus | திடீரென அரசு பேருந்து மீது கிழிந்து விழுந்த பந்தல் நடுரோட்டில் பரபரப்பு நாமக்கல்லில் சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வெயிலில் இருந்து பாதுகாப்பாக இருக்க அமைக்கப்பட்ட பச்சை பந்தல், பலத்த காற்றால் கிழிந்து அரசு பேருந்தின் மீது விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மோகனூர் சாலை சந்திப்பில் நடந்த இந்தச் சம்பவத்தில், பேருந்து ஓட்டுநரும் வாகன ஓட்டிகளும் அதிர்ச்சி அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட நிலையில், மாநகராட்சி ஊழியர்கள் கிழிந்த பந்தலை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
