Govt Bus | டயர் பஞ்சராகி சென்டர் மீடியனில் ஏறிய அரசு பஸ்
நடுவழியில் பஞ்சரானதால் சென்டர் மீடியனில் ஏறிய அரசு பஸ் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் அருகே, அரசு மாநகரப் பேருந்து திடீரென பஞ்சரானதால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது... நிலைதடுமாறி சாலையின் நடுவே இருந்த சென்டர் மீடியனில் ஏறி நின்றதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்... எனினும், ஓட்டுநரின் சமயோசிதத்தால் பயணிகள் அனைவரும் சிறிய காயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். விபத்தைத் தொடர்ந்து, அப்பகுதி மக்களின் உதவியுடன் பேருந்து சென்டர் மீடியனில் இருந்து கீழே இறக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.
