ரூ.8 கோடிக்கு விற்பனையான ஆடுகள்.. வாயடைத்து போன வியாபாரிகள்

x

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள ஆட்டுச் சந்தையில், எட்டு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. அதிகாலை 3 மணிக்கு சந்தை தொடங்கிய நிலையில், நான்கு மணி நேரத்திலேயே எட்டு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனிடையே, சந்தை பகுதி சேறும் சகதியுமாக இருந்ததால், வியாபாரிகள், விவசாயிகள் அவதி அடைந்தனர். மேலும், ஆடுகளை ஏற்றி வந்த டாடா ஏசி வாகனம் சேற்றில் சிக்கியதால், ஓட்டுநர்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.


Next Story

மேலும் செய்திகள்