எருதாட்ட விழாவில் ஓடிய ஆடுகள் - கூட்டத்தில் சிரிப்பலை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டையில் ஸ்ரீ பேட்டராய சுவாமி கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, பாரம்பரிய எருதாட்ட விழா நடைபெற்றது. இந்த எருதாட்ட விழாவில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 300-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அப்போது கூட்டத்தில் மிரண்டு ஓடிய காளையால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.
இதனிடையே, எருதாட்ட விழாவில் இளைஞர்கள் சிலர் ஆடுகளை அவிழ்த்து விட்டது பார்வையாளர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது
Next Story
