கீழடி அகழாய்வு பணிகளுக்கு தாராளமாக நிதி வழங்க மத்திய-மாநில அரசுகளுக்கு ஜி.கே. வாசன் கோரிக்கை

கீழடி அகழாய்வு பணிகளுக்கு தாராளமாக நிதி வழங்க மத்திய-மாநில அரசுகளுக்கு ஜி.கே. வாசன் கோரிக்கை
கீழடி அகழாய்வு பணிகளுக்கு தாராளமாக நிதி வழங்க மத்திய-மாநில அரசுகளுக்கு ஜி.கே. வாசன் கோரிக்கை
Published on

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தொடங்கப்பட்ட அகழாய்வு பணிகளால் கிடைக்கப் பெற்ற தொல்பொருட்கள் மூலம் பண்டைய கால வரலாற்றை அறிந்து கொள்ள முடிவதாக தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். இந்த அகழாய்வு பணிகளை மத்திய-மாநில அரசுகள் தொய்வில்லாமல் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அகழாய்வு பணிகளுக்கு தாராளமாக நிதி ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அகழாய்வில் கிடைக்கப்பெறும் தொல்பொருட்களை பாதுகாப்பாக இருக்க அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்றும் அவற்றின் மூலம் அறியப்படும் வரலாற்று செய்திகளை பாடபுத்தகங்களில் மாணவர்கள் படித்து பயன்பெற வழிவகுக்க வேண்டும் என்றும் ஜி.கே. வாசன் கேட்டு கொண்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com