சிறுமி கடத்தல் - இளைஞர் கோயிலில் தூக்கிட்டு தற்கொலை

x

கன்னியாகுமரியில், சிறுமியை கடத்திய வழக்கில் தேடப்பட்ட இளைஞர் கோயிலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி, இரணியல் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்தி, கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக தலைமறைவாகிவிட்டதாக, சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இது குறித்து புகார் பதிவு செய்த போலீசார், இருவரையும் தேடி வந்தனர். இந்த நிலையில், சிறுமியை அவரது வீட்டில் ஒப்படைத்துச் சென்ற ஹரிஹரன், தனது வீட்டின் அருகில் உள்ள கோயிலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தற்கொலையா? கொலையா? என்ற கோணத்தில் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்