எரிவாயு சிலிண்டர் தீப்பிடித்து விபத்து : அதிர்ஷ்டவசமாக தப்பிய 5 பேர்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நிலையூர் கிராமத்தில் வசித்து வரும் பாபு என்பவரின் வீட்டில் எரிவாயு கசிந்து தீவிபத்து ஏற்பட்டது.
எரிவாயு சிலிண்டர் தீப்பிடித்து விபத்து : அதிர்ஷ்டவசமாக தப்பிய 5 பேர்
Published on
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நிலையூர் கிராமத்தில் வசித்து வரும் பாபு என்பவரின் வீட்டில் எரிவாயு அடுப்பை சர்வீஸ் செய்தனர். அப்போது திடீரென எரிவாயு கசிந்து தீவிபத்து ஏற்பட்டது. இதில் வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. ஆனால் பாபு, அவரின் மனைவி மற்றும் 3 குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com