விரைவு ரயிலில் விரைந்து வந்த பார்சல் - சிக்கிய பெண்

x

ரயிலில் கஞ்சா கடத்தி வந்த பெண்ணை, சென்னை ரயில் நிலையத்தில் போலீசார் கைது செய்ததுடன், 10 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். காண்பாத் விரைவு ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் வந்த இளம்பெண் ஒருவரை, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்தப் பெண் 10 கிலோ கஞ்சாவை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. அந்தப் பெண்ணை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தியபோது, ஒடிசாவை சேர்ந்த ஜோதிகா தாஸ் என தெரியவந்தது. கஞ்சா கடத்தி வந்தது குறித்து கைதான பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்