வட மாநில சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

வட மாநில சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
Published on

சென்னை புது வண்ணாரப்பேட்டையில், வட மாநில சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சம்பவத்தில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த சிறுமிக்கு, திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அப்போது சிறுமியை அவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரித்தபோது, சிறுமியை அவரது உறவினர்கள் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதில், மனோஜ் என்ற நபரை போலீசார் கைது செய்த நிலையில், மற்றொருவரை தேடி வருகின்றனர்

X

Thanthi TV
www.thanthitv.com