உலகப் புகழ்பெற்ற சென்னிமலை நெசவு போர்வைகள் : அரசு கொள்முதல் செய்யவில்லை

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்னிமலை நெசவாளர்களின் கூட்டுறவு சங்கம் மூலம் உற்பத்தி செய்யும் போர்வைகளை அரசு கொள்முதல் செய்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உலகப் புகழ்பெற்ற சென்னிமலை நெசவு போர்வைகள் : அரசு கொள்முதல் செய்யவில்லை
Published on
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்னிமலை நெசவாளர்களின் கூட்டுறவு சங்கம் மூலம் உற்பத்தி செய்யும் போர்வைகளை அரசு கொள்முதல் செய்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வழக்கமாக புயல் வெள்ளம் போன்ற நேரங்களில் இங்கிருந்து போர்வைகளை அரசு கொள்முதல் செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும். ஆனால் இந்த முறை வழக்கத்திற்கு மாறாக விலை குறைவு என்பதால் விசைத்தறி மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மலிவான போர்வைகளை அரசு கொள்முதல் செய்து வருவதாகவும், இதனால் கைத்தறி நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்த நெசவாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
X

Thanthi TV
www.thanthitv.com