சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர் காந்திக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் இதற்கான விழா நடைபெற்றது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, நடிகர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.