நாளை முதல்... அனுமதி இலவசம் - சென்னை மக்களே ரெடியா..?

சென்னை மாநகராட்சி வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தை நாளை (டிசம்பர் 26) முதல் பொதுமக்கள் இலவசமாகப் பார்வையிட அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 32.62 கோடி ரூபாய் செலவில் பழைமை மாறாமல் புனரமைக்கப்பட்டுள்ள இந்த அரங்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த நேற்று முன் தினம் திறந்து வைத்தார். இந்நிலையில் நாளை முதல் மாநகராட்சி இணையதளத்தின் வாயிலாக கட்டணமின்றி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

X

Thanthi TV
www.thanthitv.com