சாலையோர ஸ்வீட் கடைக்காரர்களை குறிவைத்து நடக்கும் மோசடி - உஷார்

x

கடலூரில் மில்டரி கேண்டினில் இருந்து பேசுவதாக கூறி ஸ்வீட் கடைக்காரரிடம் 14 ஆயிரம் ரூபாய் மோசடி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குள்ளஞ்சாவடி பகுதியில் கொட்டகை அமைத்து ஸ்வீட் கடை நடத்தி வரும் சசிகுமார்-சுமதி தம்பதியிடம் குறைந்த விலைக்கு எண்ணெய், ரம் அனுப்புவதாக கூறி, மர்ம நபர் ஒருவர் ஜி-பே மூலம் பணம் பெற்றுள்ளார்.

பின்னர் அந்த நபரை தொடர்பு கொள்ள முடியாததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தம்பதி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அப்போதுதான் தங்களை போல் பலர் இது ஏமாற்றப்பட்டு இருப்பதை அவர்கள் அறிந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்