வாஜ்பாய் அஸ்திக்கு தலைவர்கள், பொது மக்கள் அஞ்சலி

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்திக்கு ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
வாஜ்பாய் அஸ்திக்கு தலைவர்கள், பொது மக்கள் அஞ்சலி
Published on

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி தமிழகத்தில் சென்னை, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், மதுரை, திருச்சி , ஈரோடு , தூத்துக்குடி உள்ளிட்ட ஏழு இடங்களில் கடல் மற்றும் ஆறுகளில் கரைக்கப்பட உள்ளது. சென்னையில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் நேற்று வைக்கப்பட்டிருந்த வாஜ்பாய் அஸ்திக்கு ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து வாஜ்பாய் அஸ்தி ஊர்லமாக எடுத்துச் செல்லப்பட்டது. தமிழகம் முழுவதும் சென்னை உள்ளிட்ட 7 ஊர்களில் உள்ள கடல் மற்றும் ஆறுகளில் வரும் 26 ஆம் தேதியன்று வாஜ்பாய் அஸ்தி கரைக்கப்பட உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com