

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 87 வயதான அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஜெமினி கே ராமச்சந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.அவருடைய உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ஆரணியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது.
இன்று காலை அங்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளரும், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அவர்கள் நேரடியாக சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.