

தமிழக மக்களுக்காக வாழ்ந்து சரித்திர சாதனைகளை படைத்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ புகழாரம் சூட்டியுள்ளார். உடுமலையில் நடைபெற்ற ஜெயலலிதாவின் பிறந்த நாள்விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ பல சோதனைகளை படிப்படியாக கடந்து வந்தவர் ஜெயலலிதா என்று கூறினார். பின்னர் அமைச்சர்கள் பெண்களுக்கு சேலைகள் உள்ளிட்டவற்றை வழங்கினர்.