

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, மாமல்லபுரத்தில் தமிழக சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியை காண வந்த வெளிநாட்டு பயணிகளுக்கு, மலர் மாலைகள் அணிவித்தும், குங்குமம் வைத்தும் சுற்றுலாத் துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. வெளிநாட்டு பயணிகள் சிலர், கரகாட்ட கிராமிய குழுவினருடன் இணைந்து தலையில் கரகம் வைத்து நடனம் ஆடி மகிழ்ந்தனர்.