நெய்வேலி, வேலூரில் விரைவில் விமான சேவை துவங்கும் என மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்தார். திருச்சி புதிய விமான முனையம் திறப்பு விழாவில் பேசிய அவர், விமான போக்குவரத்து வளர்ச்சிக்கான மையமாக தமிழகம் திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார். வரும் 2025ஆம் ஆண்டுக்குள் 121 விமான நிலையங்கள் பசுமை விமான நிலையமாக மாற்றப்படும் என உறுதி அளித்தார்.