

மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளதால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மீனவர்கள் வேலை இழந்துள்ளனர். காற்றின் வேகத்தை அளவிடும் இணையதளத்தில் இந்தவாரம் முழுவதும் வழக்கத்தை விடவும் காற்றின் வேகம் குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்று கூறி தடை விதித்துள்ளது முரண்பாடாக இருப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.