Ranipettai Incident| +2 தேர்வு மையத்திற்குள் வீசப்பட்ட நாட்டு பட்டாசு | பள்ளி மாணவனுக்கு நேர்ந்த கதி

+2 தேர்வு மையத்திற்குள் வீசப்பட்ட நாட்டு பட்டாசு | பள்ளி மாணவனுக்கு நேர்ந்த கதி

பள்ளி மாணவன் மீது நாட்டு பட்டாசு வீச்சு - பரபரப்பு அரக்கோணம் அருகே +2 வகுப்பு பொது தேர்வு மைய பள்ளி வளாகத்தில் மர்ம நபர்கள் நாட்டு பட்டாசை வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசு மற்றும் இரண்டு தனியார் பள்ளி மாணவர்கள் என 190 மாணவ மாணவியர்கள் +2 வகுப்பு பொது தேர்வு எழுதினர்.. இந்த நிலையில் காலை தேர்வு மைய வளாகத்திற்குள் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் பின்புறம் மர்ம நபர்கள் நாட்டு பட்டாசு வீசி வெடிக்க செய்துள்ளனர்.... இதில் அருகில் இருந்த தனியார் பள்ளி 16 வயது 12 ஆம் வகுப்பு மாணவனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது... காயம் அடைந்த மாணவன் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மீண்டும் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளார்..

X

Thanthi TV
www.thanthitv.com