Tiruppur Fire | அமராவதி ஆற்றின் கரையோரத்தில் பற்றியெரிந்த தீ | வயல்வெளிகளுக்கும் பரவியதால் பரபரப்பு

அமராவதி ஆற்றின் கரையோரத்தில் பற்றியெரிந்த தீ | வயல்வெளிகளுக்கும் பரவியதால் பரபரப்பு

Tiruppur | Fire | அமராவதி ஆற்றின் கரையோரத்தில் பற்றியெரிந்த தீ | வயல்வெளிகளுக்கும் பரவியதால் பரபரப்பு

அமராவதி ஆற்றங்கரையில் தீ - வயல்வெளிகளுக்கும் பரவியதால் பரபரப்பு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அமராவதி ஆற்றின் கரையோரத்தில் காட்டுத்தீ ஏற்பட்ட‌தால் பரபரப்பு ஏற்பட்ட‌து. தாராபுரம் அருகே, ஈஸ்வரன் கோவில் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றுப்பாலத்தின் அடியில் மது அருந்திய ஆசாமிகள் சிலர், தீ வைத்த‌தாக தெரிகிறது. ஆற்றுப் படுகையில் இருந்த புதர்கள் மூலம் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தீ பரவியது. இந்த தீயானது வயல்வெளிகளுக்கு பரவியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், காற்றின் வேகம் அதிகமாக இருந்த‌தால் தீயை அணைக்க முடியாமல் போராடினர். பல மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com