தமிழக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. ஜனவரி 6 ஆம் தேதி இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், நிதிநிலை அறிக்கை தயாரிப்பது குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்துத்துறை முதன்மை செயலர்களுடன் துணை முதலமைச்சரும், நிதி துறை அமைச்சருமான பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட உள்ள புதிய திட்டங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.