மலை கிராமங்களில் கொரோனா அச்சம்

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா அச்சம் காரணமாக மலை கிராமத்தின் சுற்று பாதைகளை மூங்கில் மரங்களை கொண்டு பழங்குடி பெண்கள் அடைத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா அச்சம் காரணமாக மலை கிராமத்தின் சுற்று பாதைகளை மூங்கில் மரங்களை கொண்டு பழங்குடி பெண்கள் அடைத்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கூடலூர் அருகே உள்ள கோடமூலா கிராமத்தை சேர்ந்த பழங்குடி மக்கள் தங்களை தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளனர். அதன்படி தங்கள் கிராமத்திற்கு வரும் அனைத்து சாலைகளிலும் மூங்கில் மரங்களை கொண்டு தடுப்பு வேலி அமைத்துள்ளனர். காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு வரும் வாகனங்களை கூட கிராமத்திற்குள் அனுமதிப்பது இல்லை. மேலும், அத்தியாவசிய பொருட்கள் தேவைப்படும் கிராம மக்கள் அவர்களாகவே சாலை பகுதிக்கு வந்து பொருட்களை வாங்கி செல்லவேண்டும் என கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com