பிரிந்து சென்ற மனைவி - 2 குழந்தைகளை கொன்ற தந்தை தற்கொலை
ஆரணி அருகே தெள்ளூர் கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் தனது 9 வயது மகளையும், 7 வயது மகனையும் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தானும் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 3 ஆண்டுகளாக குடும்பத்துடன் இவர் சென்னை குரோம்பேட்டை பகுதியில் தங்கி வேலைப்பார்த்து வந்துள்ளார். அவரின் 2 குழந்தைகளும் அரசு பள்ளியில் படித்து வந்தனர். இந்த சூழலில், அவரது மனைவி பூங்கொடிக்கு சென்னையில் வேறொரு ஆணுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும், இதனால் ஏற்பட்ட தகராறில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக மன உளைச்சலில் இருந்த அவர், தீபாவளிக்காக சொந்த ஊருக்கு சென்ற நிலையில், உருக்கமாக கடிதம் எழுதிவைத்து விட்டு தனது 2 குழந்தைகளையும் கொன்றுவிட்டு தனது உயிரையும் மாய்த்துக் கொண்டார்.
Next Story
