Extra Marital Affairs | `தனிமையில்’ இருந்த மகளை கண்டந்துண்டமாக வெட்டி போட்ட சித்தப்பா
தகாத உறவில் இருந்த இளம்பெண்ணை கொடூரமாக கொலை செய்த சித்தப்பா கணவரை பிரிந்து வேறு ஒரு நபருடன் தகாத உறவில் இருந்த இளம்பெண்ணை அவரது சித்தப்பாவே கொடூரமாக வெட்டி கொன்ற சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலக்குளம் பகுதியை சேர்ந்த சுபிதா என்ற 28 வயது பெண், கணவரை பிரிந்து தாயார் வீட்டில் வசித்து வந்த நிலையில், வீட்டில் வேறு ஒரு ஆண் நண்பருடன் தனிமையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்த சித்தப்பா ராஜேஷுக்கும், சுபிதாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது ஆத்திரமடைந்த ராஜேஷ் ஒரு கட்டத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து சுபிதாவை தலை, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, தலைமறைவாக இருந்த ராஜேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
