Fake police | சென்னையில் சிக்கிய போலி போலீஸ்..பூக்கடை பகுதியை அதிரவைத்த சம்பவம்

x

சென்னை பூக்கடை பகுதியில் நரேஷ்குமார் என்பவரிடமிருந்து போலீஸ் என கூறி, 55 லட்ச ரூபாய் வழிப்பறி செய்த வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஏற்கனவே அன்பரசி, விமல் அபிஷேக் ஞானஷாம், காயத்ரி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கோவையில் பதுங்கியிருந்த அன்வர்தீன், பாவா ஆகியோரும், சென்னை சென்ட்ரலில் ரூபன் சக்ரவர்த்தி என்பவரும் போலீசாரிடம் சிக்கினர். கைது செய்யப்பட்ட மூவரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தலைமுறைவாக உள்ள நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்