போலி பாஸ்போர்ட் தயாரித்த இலங்கை தமிழர் கைது

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே போலி பாஸ்போர்ட் தயாரித்த இலங்கை தமிழர் கைது செய்யப்பட்டார்.
போலி பாஸ்போர்ட் தயாரித்த இலங்கை தமிழர் கைது
Published on
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே போலி பாஸ்போர்ட் தயாரித்த இலங்கை தமிழர் கைது செய்யப்பட்டார். பவளத்தானூரில் உள்ள முகாமில் உள்ள ஜோசுவா என்பவரின் 21 வயது மகன் ரிஜிப்பன் என்பவர், ஆஸ்திரேலியா செல்வதற்காக போலி பாஸ்போர்ட் தயாரித்து வந்ததாக க்யூ பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது, அங்கிருந்த போலி பாஸ்போர்ட்டை கைப்பற்றினர். தொடர்ந்து, ரிஜிப்பனை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com