போலி சான்றிதழ் வழக்கு - சிபிசிஐடி, ஏடிஜிபி ஆஜராக உத்தரவு

x

போலி சான்றிதழ் வழக்கு - சிபிசிஐடி, ஏடிஜிபி ஆஜராக உத்தரவு

பெட்ரோல் பங்க்குகள் அமைக்க போலி தடையில்லா சான்றிதழ் பெறப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கு குறித்து சிபிசிஐடி கூடுதல் டிஜிபி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி வழக்கை சிபிஐக்கு மாற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை தமிழ்நாடு காவல்துறை சரியாக விசாரிக்கவில்லை என்றால், சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்படும் என எச்சரித்தது. மேலும், வழக்கை சிறப்பு புலனாய்வு அமைப்பு மூலம் விசாரிக்கலாமா? என்பது குறித்து கருத்து தெரிவிக்க, பிப்ரவரி 10ம் தேதி நேரில் ஆஜராகும்படி, சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி-க்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்