Extra Marital Affair | இளம்பெண் மீது கொலை முயற்சி - தனிப்பிரிவு எஸ்.எஸ்.ஐ கைது

x

இளம்பெண் மீது கொலை முயற்சி - தனிப்பிரிவு எஸ்.எஸ்.ஐ கைது

தர்மபுரி மாவட்டத்துல பெண்ணை கொல்ல முயன்ற வழக்குல, தனிப்பிரிவு எஸ்.எஸ்.ஐ. ஒருத்தர போலீசார் கைது செஞ்சிருக்காங்க... பாப்பாரப்பட்டியில், கருத்துவேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்த வாழும் பெண் ஒருவர், கணவர் தன்னிடம் தகறாரில் ஈடுபட்டு வருவதாக கூறி, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அங்கு தனிப்பிரிவு எஸ்எஸ்ஐ ஆக பணியாற்றி வந்த ராஜாராம் என்பவர், புகாரளிக்க வந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி தகாத உறவில் ஈடுபட்டுள்ளார், இது குறித்த தகவல் காவலர் ராஜாராம் குடும்பத்தினருக்கு தெரியவர, அந்த பெண்ணை அதே பகுதியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு வரவழைத்து, கிணற்றில் தள்ளி கொலை செய்ய முயன்றுள்ளனர். இதில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பெண் அளித்த புகாரின் பேரில் எஸ்எஸ்ஐ ராஜாராமை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்