

தி.மு.க தலைவர் ஸ்டாலின் அளித்த உதவியால் பயன் அடைந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் செல்வராஜ், அவருக்கு நன்றி கூறினார். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் சிகிச்சை பெற்று வரும்
செல்வராஜை, தி.மு.க தலைவர் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். விபத்தில் வலது காலை இழந்த அவருக்கு ஸ்டாலின் செயற்கை கால் வழங்கினார். அப்போது, தி.மு.க தலைவருக்கு
பயனாளி செல்வராஜ், நன்றி கூறினார்.