Erode | இரவில் திடீரென கேட்ட சைரன் சத்தம் - திரும்பி பார்க்காமல் ஓடிய உருவம்
Erode | இரவில் திடீரென கேட்ட சைரன் சத்தம் - திரும்பி பார்க்காமல் ஓடிய உருவம்
கரும்புத் தோட்டத்தில் நுழைந்த யானை - சைரன் சத்தத்தால் ஓட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி அருகே உள்ள கரும்புத் தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை, வனத்துறை வாகனத்தின் சைரன் சத்தத்தால் ஓட்டம் பிடித்தது. வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை, தாளவாடி அருகேயுள்ள அருள்வாடி கிராமத்தில் உள்ள கரும்புத் தோட்டத்தில் நுழைந்து சேதப்படுத்தியது. தகவல் அறிந்த வனத்துறையினர், யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வனத்துறை வாகனத்தின் சைரன் சத்தம் கேட்டு, யானை மீண்டும் வனப்பகுதி நோக்கி ஓடியது.
