எல்சா 3 கப்பல் விபத்து... நீதிமன்றம் அதிரடி உத்தரவு

எல்சா 3 கப்பல் விபத்தை பேரிடராக அறிவித்து, கடலில் கலந்த பிளாஸ்டிக் உள்ளிட்ட அபாயமான பொருட்களை அகற்றக் கோரி மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த கப்பலிலிருந்து 54 கண்டெய்னர்கள் கேரளா மற்றும் கன்னியாகுமரியில் கரை ஒதுங்கியிருப்பதை சுட்டிக்காட்டி,

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அந்தோணி முத்து, ஜஸ்டின் சுந்தர், சுசீலா, கார்மேல் ஆகியோர் தாக்கல் செய்த

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது "மத்திய, மாநில அரசுகள் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மூன்று வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com