Elephant | பிள்ளை குட்டிகளோடு.. பசி கொடுமை தாங்காமல் யானைகள் செய்த செயல்
Elephant | பிள்ளை குட்டிகளோடு.. பசி கொடுமை தாங்காமல் யானைகள் செய்த செயல்
Elephant | பிள்ளை குட்டிகளோடு.. பசி கொடுமை தாங்காமல் யானைகள் செய்த செயல்
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே மஞ்சக்கொம்பை கிராமத்தில் குட்டிகளுடன் சாலையில் முகாமிட்ட யானை கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. குப்பை தரம் பிரிக்கும் மையத்தில் குப்பைத் தொட்டிகளில் இருந்த கழிவுகளை இழுத்து சாலையில் வீசி உணவு தேடிய யானைகள், நீண்ட நேரம் சாலையோரத்தில் நின்றதால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். பின்னர் யானைக் கூட்டம் அருகிலிருந்த தேயிலைத் தோட்டங்களுக்குள் சென்றதால் தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் அச்சத்தில் உள்ளனர். யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து அவற்றை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
