"முந்தைய மாத மின் கட்டணத்தையே செலுத்தலாம்" - தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவிப்பு

மின்கட்டணங்களை செலுத்துவதற்கு மின்வாரிய அலுவலகங்களுக்கு வர வேண்டாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
"முந்தைய மாத மின் கட்டணத்தையே செலுத்தலாம்" - தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவிப்பு
Published on
மின்கட்டணங்களை செலுத்துவதற்கு மின்வாரிய அலுவலகங்களுக்கு வர வேண்டாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், மார்ச் - ஏப்ரல் மாத மின் கட்டணங்களை முந்தைய மாத கணக்கீட்டின்படி செலுத்தலாம் என அறிவித்துள்ளது. அவ்வாறு செலுத்திய மின்கட்டணம் கூடுதல், குறைவாக இருந்தால் பின் வரும் மாதங்களில் சரி செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது. மின்கட்டணங்களை இணையதளம் வழியாகவும், கைபேசி வங்கி வழியாக செலுத்துமாறும், வாடிக்கையாளர்கள் கவுண்டர்களுக்கு வருவதை தவிர்க்குமாறும் வலியுறுத்தி உள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com