பூதாகரமான தேர்தல் பத்திர விவகாரம்.. - ஜி.கே.வாசன் கருத்து

x

தேர்தல் பத்திரம் பொறுத்த வரையில் எந்த கட்சியும் சட்டத்திற்கு எதிராக வாங்கவில்லை என்று தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அக்கட்சி தலைவர் ஜி்.கே.வாசன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் பத்திரம் விவகாரத்தை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம் என்று கேட்டு கொண்டார். தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்தது அவருடைய தனிப்பட்ட காரணம் என்றும் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்