சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஜப்பான் நாடாளுமன்ற குழுவினர் ஆய்வு செய்தனர். ஜப்பான் அரசு இந்தியாவிற்கு பல நல திட்டங்களுக்காக நிதி உதவிகளை அளித்து வருகிறது. அந்த வகையில் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் உள்ள புற நோயாளிகள் பிரிவு ஜப்பான் நிதி உதவியால் கட்டப்பட்டது. இதனை ஜப்பான் நாடாளுமன்ற குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். அப்போது சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.