அவசர காலத்தில் தூங்கி வழிந்த EB ஊழியர்கள்.. அதிர்ச்சி வீடியோ
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே, மின்வாரிய ஊழியர்கள் தூங்கிக் கொண்டிருந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. மிஞ்சூர் சுற்றுப்பகுதியில் மழை காரணமாக மின் விநியோகம் பாதிக்கப்பட்ட நிலையில், அப்பகுதியினர் மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டனர். ஆனால் நெடுநேரமாகியும், தொலைபேசி அழைப்பு ஏற்கப்படாத நிலையில் நேரில் சென்று பார்த்துள்ளனர். அப்போது ஊழியர்கள் பணி செய்யாமல் தூங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story
